வேட்பு மனுதாக்கல் செய்த கையோடு உறுப்பு தானம் செய்த வேட்பாளர் !

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

வேட்பு மனுதாக்கல் செய்த கையோடு உறுப்பு தானம் செய்த வேட்பாளர் !
இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் தீவிரம் அடைந்துள்ளது. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி கட்சி தொண்டர்கள் இல்லாமல் தனது தாயுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 

வேட்புமனு தாக்கல் செய்த கையோடு கமல் பாணியில் உடல் உறுப்பு தானம் செய்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வீரசக்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

மருந்து விற்பனை பிரதிநிதியாக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய இவர் இன்று பல (மருத்துவ) ஃபார்மா நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வருகிறார். 

இவர் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் தனது தாயுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு கமல் பாணியில் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். 

அதன் பின்னரே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழில் முனைவோர் அணி மாநிலச் செயலாளரான இவர் தொழில் அதிபர் ஆவார். 

உடல் எடையை குறைக்கும் 9 வைட்டமின்கள் !

கமல்ஹாசன் நடிப்பால் ஈா்க்கப் பட்டிருந்தாலும், வெளிப்படையாக நற்பணி மன்றத்திலோ, ரசிகா் மன்றத்திலோ பணியாற்றியது இல்லை. 

இவர் திருச்சி நகைச்சுவை மன்றம், தண்ணீா் அமைப்பு, சோழ மண்டலத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு, ரோட்டரி சங்கம் உள்ளிட்டவற்றில் பல்வேறு பதவிகளை வகித்தவா். 

மநீம தொடங்கிய பிறகு, கட்சியில் இணைந்தவருக்கு தொழில் முனைவோா் அணி மாநிலச் செயலா் பதவி வழங்கப்பட்டது. 

தற்போது, அதே பதவியில் உள்ளார். இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை எதிர்த்து களம் இறங்கி உள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)