காப்பீட்டு தொகைக்காக மனைவியை மலையிலிருந்து தள்ளி கொன்ற கணவன் !

0

ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசி என்பது உங்களின் எதிர்பாராத மரணம், அல்லது உடல் குறைபாடு அல்லது கொடிய நோய் ஏற்படும் போது, 

காப்பீட்டு தொகைக்காக மனைவியை கொன்ற கணவன்
சில ஆட்-ஆன்-கள் மூலமாக உங்கள் குடும்பத்தை நிதி ரீதியாக பாதுகாக்கும் ஒரு பாதுகாக்கப்பட்ட வழி ஆகும். 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய துருக்கி கணவன். துருக்கியில் காப்பீட்டு தொகைக்காக தனது கர்ப்பிணி மனைவியை, 

மலையிலிருந்து தள்ளி விட்டு கொன்ற கணவனின் இரக்கமற்ற கொடுஞ்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018 ஜூன் மாதம் 40 வயதான ஹக்கன் அய்சல் தனது கர்ப்பிணி மனைவி செம்பரா (32) தம்பதிகள் துருக்கியை சேர்ந்தவர்கள்.

துருக்கியை சேர்ந்த முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். அதற்குப்பின் அய்சல் தமது மனைவியை மலையிலிருந்து தள்ளி விட்டுளார்.

இதனால் மனைவி சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.இதனைக் குறித்து விசாரணையில் தனது மனைவியை காப்பீடு தொகையான 40,865 பவுண்டுகளுக்காக கொலை செய்தது வெளி வந்துள்ளது.

தனது கர்ப்பிணி மனைவியுடன் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அந்த மலைக்கு சென்ற அய்சல் சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மனைவியை தள்ளி விட்டுள்ளார். 

மனைவியை மலையிலிருந்து தள்ளி கொன்ற கணவன்

இது மட்டுமின்றி மனைவி இறந்ததாக கூறி காப்பீட்டு நிறுவனத்தில் தொகையை வாங்க முயற்சி செய்துள்ளார். 

ஆனால் காப்பிட்டு நிறுவனமோ விசாரணை நடப்பதால் காப்பிட்டு பணம் வழங்க மறுத்து விட்டது . நீதிமன்ற விசாரணையில் அய்சல் தனது மனைவி தாமாகவே கால் தவறி விழுந்ததாக கூறியுள்ளார். 

நீதிமன்றம் இதை ஏற்க மறுத்து விட்டது மேலும் தீவிர விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் கணவரின் இந்த கொடுஞ்செயல் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)