இறுதிச் சடங்கின் போது உயிர்த்தெழுந்த சிறுமி !

0

இந்தோனேசியாவில் இறுதி சடங்கின் போது கண் விழித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 

இறுதிச் சடங்கின் போது உயிர்த்தெழுந்த சிறுமி !
இவருக்கு நாள்பட்ட நீரிழிவு நோய் இருந்ததால் பெரும் அவதிக்கு உள்ளானார். இந்நிலையில் உடல் நிலை கடுமையாக பாதிக்கப் பட்டதால் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அங்கு சிகிச்சை பலனின்றி மாலை சுமார் 6 மணியளவில் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அவருக்கு இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

அப்போது அவரது உடலை நீரில் குளிப்பாட்டியுள்ளனர். அப்போது திடீரென கண்விழித்த சிறுமிக்கு இதய துடிப்பும் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவுகள் மீண்டும் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் ஒரு மணி நேரத்தில் சிறுமி மீண்டும் உயிரிழந்துள்ளார். 

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இது போன்ற சம்பவம் ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது. 

கர்ப்பிணி பெண்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் ! 

அதாவது இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும் போது இப்படி நிகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளனர். இறுதி சடங்கின் போது சிறுமி கண்விழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)