சிதி என்னும் பகுதியில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி !

0

மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் நீரில் மூழ்கி 32 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிதி என்னும் பகுதியில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் பலி !
மத்திய பிரதேசம் மாநிலம் சிதி என்னும் பகுதியில் இருந்து சாட்னாவிற்கு 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதையடுத்து, அருகே இருந்தவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 

எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது குறித்த நிலை தெரியாத நிலையில், மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்றது. அதில், 32 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. 

காபி குடித்தால் மலச்சிக்கல் ஏற்படுமா?

மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)