விஷ பூச்சியினங்கள் கடித்து விட்டதா? அப்ப இதை செய்ங்க !

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்து வத்தை பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
 



கண்ணாடி விரியன் :- 

பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். 
நல்ல பாம்பு :- 

வாழைப் பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப் பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள் :- 

கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும். 

வண்டு :- 

கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக் கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர். 

சிலந்தி :- 

ஆடா தொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும். 
வெறிநாய் :- 

மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெ யில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி :- 

வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகி விடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது
 



உகந்தது. பூனை :- 

தூய்மை யாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக. 

பூரான் :- 

பஞ்சை மண்ணெண் ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது. 
பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்.❗
நட்டுவாக்காலி :- 

கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தை யாயின் தேங்காய்ப் பாலைப் பிழிந்து தரவும். இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.
Tags: