நன்னிலம் அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் !

0

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள காக்கா கோட்டூர் என்ற பகுதியில், எட்டியலூர் தெற்கு தெருவை சேர்ந்த முதியவர் காத்தான் (வயது 65).

நன்னிலம் அருகே கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் !
இவர் மயிலாடுதுறை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூர் நோக்கி சென்ற கார், நிலைத் தடுமாறி அவர் மீது மோதியது, 

இதில் சைக்கிளில் சென்ற முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார், பின்னர் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்ததில், கார் ஓட்டி வந்தவர், 

பேரளம் அருகே கடுவங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணி புரிந்து வரும் ராமமூர்த்தி என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து ராமமூர்த்தியை நன்னிலம் காவல் துறையினர் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

நொடிப்பொழுதில் முதியவர் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)