மதுரை‌யி‌ல் பொது முழக்கத்தை நீட்டிக்க வேண்டும் - அமைச்சர் !

மதுரையில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,077ஆக உயர்ந்துள்ளது.
மதுரை‌யி‌ல் பொது முழக்கத்தை நீட்டிக்க வேண்டும்

குணமடைந்தோர் எண்ணிக்கை 1,803 ஆக உள்ள நிலையில் 4,163 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் மதுரையில் பொது முடக்கத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றுடன் அங்கு அமலில் இருந்த பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் சில நாட்களுக்கு பொது முடக்கத்தை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைத் துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை விரிவுப்படுத்த முதல்வர் உத்தர விட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
Tags: