நிர்வாண வீடியோவை காட்டி பெண்ணை விபச்சாரத்தில் தள்ளிய அதிமுக பிரமுகர் !

ஒரு பெண்ணின் ஆபாச வீடியோவை எடுத்து வைத்து கொண்டு, அவரை மிரட்டி மிரட்டியே பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார் அதிமுக பிரமுகர் ஒருவர் !
நிர்வாண வீடியோவை காட்டி விபச்சாரத்தில் தள்ளிய அதிமுக பிரமுகர் !

இதற்கு அவரது மனைவியும் உடந்தை.. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை தந்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் ராஜீவ்.. இவருக்கு 35 வயதாகிறது.. 

அதிமுகவின் தேவாரம் மாணவரணி செயலாளராக உள்ளார்.. கல்யாணம் ஆகி பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் ராஜீவுக்கு ப்ரியா என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது.. அந்த பெண் ராஜீவ் வீட்டருகே வசித்து வருபவர்.. 31 வயதாகிறது.. அவரும் கல்யாணம் ஆனவர்.. 

கணவர் பெயர் சோலைமுத்து.. ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பழக்கமானது, விரைவில் நெருங்கி பழகும் அளவுக்கு வந்தது.. 

ஒன்றரை வருடமாக பழகி வருகின்றனர்.. ஒரு கட்டத்தில் பிரியாவின் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை செல்போனில் அனுப்புமாறு ராஜீவ் கேட்டுள்ளார்.. 

பிரியாவும் ராஜீவை நம்பி தன்னுடைய தனிப்பட்ட போட்டோக்கள், வீடியோக்களை அடிக்கடி அனுப்பி வைத்துள்ளார்.

இவை அனைத்தும் தன் செல்போனுக்கு வந்ததும், ராஜீவும், அவரது மனைவி சண்முகபிரியாவும் சேர்ந்து பிரியாவை மிரட்ட ஆரம்பித்தனர். 

தாங்கள் சொல்லும் நபருடன் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர்.. அதற்கு பிரியா மறுத்தால், வீடியோவை காட்டி காட்டியே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.. 

இதன் மூலம் ஏராளமான பணத்தையும் அத்தம்பதியினர் சம்பாதித்து வந்துள்ளனர். இது போல, பலரிடம் இவரது ஆபாச போட்டோவை காட்டப்பட்டு, உறவு வைத்து கொள்ள வற்புறுத்தப் பட்டுள்ளது. 
தன் குடும்பம் வறுமையில் இருந்ததாலும், இரு பெண் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் பிரியா அத்தம்பதியினர் சொல்படி கேட்டு வந்துள்ளார். 

ஆனால், நாளுக்கு நாள் ராஜீவ் தம்பதியினரின் தொல்லை அதிகமாகி கொண்டே போனது. அதனால், பிரியா தேவாரம் போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் செய்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தம்பதி இருவரையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரித்தனர்.. அப்போது பிரியாவை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததை ஒப்புக்கொண்டனர். 
இதை யடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.. பிரியா தற்போது உடல், மன ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளதால், சிகிச்சைக்காக தேவாரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.. ராஜீவ் தம்பதியினர் இப்போது ஜெயிலில்!
Tags:
Privacy and cookie settings