எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !

நாம் தினம் தோறும் சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளில் நீரை இழக்கிறோம். இந்த நீரின் இழப்பை நாம் அருந்தும் நீர் மூல மாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகவும் மட்டுமே ஈடு செய்யம் படியும்.
எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் !
மேற்சொன்ன முறையில் நீரை இழக்கும் போதும் வியர் வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதாலும் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக் கின்றது.

ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவ ற்றில் தங்கியி ருக்கிறது.

அண்ண ளவாக ஒருவருக்கு அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீர் ஒரு நாளைக்குத் தேவைப் படுகிறது. இருந்தாலும் மேலே சொன்னது போல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலை யின் அளவு என்ப வற்றைப் பொருத்தும் மாறுபடும். 
இருந் தாலும் ஒருவர் ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசிய மாகும். உங்களுக்குத் தேவை யான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டு மானாலும் அருந்தலாம். 
அதாவது சூடாகவோ, ஆறிய தாகவோ அல்லது பழச் சாறாகவோ. அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம். அது ஒரு நாளைக் குள் எந்த நேரமும் குடிக்கலாம்.

மேலே சொன்ன தெல்லாம் ஆரோக்கிய மான ஒருவருக்குத் தேவை யான நீரின் அளவாகும். வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங் களில் நீரிழப்பு அதிகரிப் பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம்.

சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.

1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்தி விட்டு படுக்கச் செல்வது சரியா?

2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்து தான் அருந்தி விட்டு தூங்க செல்ல வேண்டுமா.

3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா
4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா.

5.மேற் கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெது வெதுப்பான சூட்டில் அருந்துவது நல்லதா.

6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத் தான் அருந்த வேண்டுமா.
Tags: