மருத்துவமனை கழிவறையில் உயிரிழந்த கொரோனா நோயாளி !

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் கழிவறை யிலேயே மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.
மருத்துவமனை கழிவறையில் உயிரிழந்த கொரோனா நோயாளி

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டிருந்தார். 
கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் கதவை உடைத்துப் பார்த்த போது சடலமாகக் கிடந்தார், காயங்கள் இல்லை, 

இறந்த காரணம் தெரியவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலின் ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது சென்னை. தினமும் அங்கு நூற்றுக் கணக்கான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சென்னையில் மட்டும் இன்று 618 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. 
இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 13,362 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்குத் தடுப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Privacy and cookie settings