கிறிஸ்துமஸில் நடக்கும் சில விநோத விஷயங்கள் தெரியுமா?

0
கிறிஸ்துமஸ் என்றாலே வண்ண வண்ண அலங்காரங்களும் வகைவகை யான கேக்குகளும் தான். ஆனால் அதையும் தாண்டி கிறிஸ்துமஸ் நாள் பற்றி சில விநோதமான விஷயங் களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் தானே! வாங்க தெரிஞ்சிக்கலாம்.
கிறிஸ்துமஸ்


​கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் - இந்த நாளை தான் கிறிஸ்தவர்கள் ஆண்டு முழுவதும் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அநருங்கும் ஓரிரு மாதங்களுக்கு முன்பிருந்தே கொண்டாட்டங் களுக்கான தயாரிப்புகள் நடந்து கொண்டிருக்கும். 

கிறிஸ்வர்கள் மட்டுமல்ல, எல்லா மதத்தினரும் அன்றைய நாளில் கேக் மற்றும் இனிப்புகள் சாப்பிட்டு மகிழ்வதுண்டு. 

ஆனால் அதே கிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கடைபிடிக்கப்படும் சில விநோதமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கிறிஸ்துமஸ் பண்டிகையை வெறுமனே கிறிஸ்துவர்கள் மட்டுமே கொண்டாடுவ தில்லை. மற்ற மதத்தினரும் சேர்ந்தே இதை கொண்டாடு கிறார்கள். 

ஏனென்றால் இது ஒரு ஆண்டின் இறுதி மாதத்தின் இறுதி வாரம். அந்த வருடத்தை வழியனுப்பி விட்டு, அடுத்து வரும் புது ஆண்டுக் காக மக்கள் காத்திருப்பார்கள். 
அதோடு எல்லோரும் விடுமுறையை தங்கள் உறவினர்களோடு கழிக்கும் காலகட்ட மாகத் தான் இந்த கிறிஸ்துமஸ் - புத்தாண்டு காலம் இருக்கிறது. 

அத்தகைய கிறிஸ்துமஸ் நாள் பற்றிய சில விநோதமான மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

​கேன்டி கேன் மிட்டாய்

குழந்தைகளின் மிக விருப்பமான கேன்டி மிட்டாய்களில் ஒன்று தான் இந்த கேன்டி கேன் மிட்டாய். வாக்கிங் ஸ்டிக் (கைத்தடி) போன்று வெள்ளையும் சிவப்பும், வெள்ளையும் மற்ற நிறங்களும் கலந்து இருக்கும். 

இந்த மிட்டாய் பிறந்த கதையைப் பற்றி தெரிந்தால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

கிறிஸ்துமஸ் நாட்களில் தேவாலயங் களுக்கு முதல் இரவில் இருந்தே கூட்டு பிரார்த்தனைக்காக கூடுவார்கள். அந்த சமயங்களில் குழந்தைகள் எல்லாம் ஒன்றுகூடி விளையாடும். 
கேன்டி கேன் மிட்டாய்


அப்படி விளையாடும் குழந்தைகள் பிரார்த்தனை நேரங்களிலும் அதிகமாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள். 

அப்போது அமெரிக்காவில் உள்ள கலோன் தேவாலயத்தில் உள்ள இசைக் குழுவில் உள்ள ஒருவர் தான் ஆடு மேய்க்கும் குச்சியைப் போன்று ஒரு கைத்தடி வடிவில் 

அந்த குழந்தைகளை பயமுறுத்து வதற்கான மிட்டாய் போல செய்து கொடுத்து அமைதி காக்க வைத்தாராம். காலப்போக்கில் குழந்தைகளை பயமுறுத்த தயாரித்த கேன்டி கேன் குழந்தை களுக்கு பிடித்த ஒன்றாக மாறிப் போய் விட்டது.

​கிறிஸ்துமஸ் கஞ்சி - பிளம் கேக்

கிறிஸ்மஸ் என்றாலே நிறைய உலர்ந்த பழங்கள் சேர்க்கப்பட்டு செய்யப்பட்ட பிளம் கேக் தான் ஸ்பெஷல். மற்ற கேக்குகளை இந்த சமயங்களை பெரிதாக நினைப்ப தில்லை. 

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆரம்ப காலத்தில் கிறிஸ்துமஸ் என்றாலே ஒரு கஞ்சி தான் ஸ்பெஷல். பிளம் கேக் என்பது மிக அரிதான விலை யுயர்ந்த பொருள். அதை கிறிஸ்துமஸ் நாட்களில் மிகப்பெரிய பணக்கார வீடுகளில் மட்டும் தான் செய்வார்கள். 
அதோடு எல்லா வீடுகளிலும் கேக் செய்யும் ஓவனெல்லாம் வைத்திருக்க மாட்டார்கள். அதனால் கிறிஸ்துமஸ் நாட்களில் நன்கு நைசாக அரைத்த கோதுமை மாவில் கஞ்சி தயாரிக்கப் படுமாம். 

ஆரம்ப காலத்தில் வெறும் உப்புக் கஞ்சியாக மட்டுடே இருந்த இந்த உணவு படிப்படியாக மசாலா, உலர்ந்த பழங்கள், நட்ஸ் எல்லாம் சேர்க்கப்பட்டு பின் ரிச்சான உணவாக மாறி விட்டது

​வான்கோழி

கிறிஸ்துமஸ் நாளில் பிரியாணி, வகை வகையான மீன்கள், சிக்கன் என என்ன சாப்பிட்டாலும், கட்டாயம் கிறிஸ்துமஸ் தினத்தன்று அவருடைய உணவில் வான்கோழி பிரதான உணவாக இருக்க வேண்டியது கட்டாயம். 
வான்கோழி


இந்த வான்கோழிக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அது என்ன தெரியுமா?

16 ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ஹென்றி அவர்கள் ஒரு கிறிஸ்துமல் நாளில் வான்கோழி சாப்பிட்டாராம். 

உடனே கிறிஸ்துமஸ் என்றால் கட்டாயமாக வான்கோழி சாப்பிட வேண்டுமாம் என்று வதந்தி பரவி, அதுவே பின் கட்டாய மாக்கப்பட்டு விட்டது. 

அதிலிருந்து தான் வான்கோழி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றாக மாறிப் போய் விட்டது.

​நைட் டின்னர்

முதல் நாள் இரவு முழுக்க கூட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டு வந்து கொஞ்சம் உணவு அருந்து விட்டு, விருந்துக்கு தயார் செய்வார்கள். இரவு உணவு தான் தடபுடலாக இருக்கும். 
நிறைய சிறப்பு உணவுகள் சமைக்கப் பட்டிருக்கும். இரவு உணவு மட்டுமே கிட்டதட்ட 7000 கலோரி களுக்கு மேலாக இருக்குமாம். 

ஆனால் அந்த நடைமுறைகள் எல்லாம் இப்போது ஹெல்த் கான்சியஸ் என்ற பெயரில் மறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)