ஓட்டு போடும் நேரத்துக்குள் குழந்தையை நாசம் செய்தவன் - நெடுவாசலில் !

0
ஒரு பக்கம் ஊர்மக்கள் ஓட்டுப்போட்டு கொண்டிருந்த நேரம்.. 3 வயது குழந்தையை நாசம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.
குழந்தையை நாசம் செய்தவன்


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆருகே உள்ளது நெடுவாசல் கிழக்கு கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் பாலமுருகன்.. 32 வயதாகிறது.

10 வருஷத்துக்கு மேல் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு சில வருடத்துக்கு முன்புதான் ஊர் திரும்பினார். கல்யாணம் செய்து குழந்தை குட்டியுடன் வாழ்ந்து வருகிறார்.

பாலமுருகன்

இந்நிலையில், 30ம் தேதி நெடுவாசல் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்துள்ளது. 

அப்போது மாலை நேரம் என்பதால், ஓட்டு போடாதவர் களும் விரைந்து ஓட்டு போட சென்று கொண்டிருந்தனர்.

தீவிர சிகிச்சை

அந்த சமயத்தில் பாலமுருகன் தன் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்துள்ளார்.. ஊருக்குள் யாருமே இல்லை என்று நினைத்து பாலமுருகன் இவ்வாறு செய்துள்ள தாக தெரிகிறது. 

ஆனால், அங்கிருந்தோர் இதை பார்த்து கதறி கூச்சலிட்டனர்.. சத்தம் கேட்டதும் பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

போக்சோ
போக்சோ


உடனே பெற்றோர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினர்..

அங்கு படுகாய மடைந்துள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசில் குழந்தையின் பெற்றோர்கள் புகார் தந்ததையடுத்து, பாலமுருனை கைது செய்தனர்.

பரபரப்பு

பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்த ஆலங்குடி மகளிர் போலீசார் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

ஊருக்குள் பொது மக்கள் ஓட்டு போடும் சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, 3 வயது குழந்தையை இளைஞர் சீரழித்த சம்பவம் நெடுவாசலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings