போலீசுக்கே பாதுகாப்பு இல்லை - வில்சன் குடும்பத்திற்கு திமுக ரூ.5 லட்சம் உதவி !

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போது தீவிரவாதி களால் சுட்டுக் கொல்லப் பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு 
போலீசுக்கே பாதுகாப்பு இல்லை


திமுக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வில்சன் கொலை சம்பவம் குறித்து திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க வில்லை என

அதிமுக, பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"எனது கணவர் குடும்பத்தை விட போலீஸ் துறையையே அதிகம் நேசித்தவர்" என்று உயிரிழந்த வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி அளித்துள்ள பேட்டி மிகுந்த மன வேதனையைத் தருகிறது. 

தமிழகக் காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருப்பது மோசமான வாய்ப்பாகும்.

எனினும் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறி, அதிமுக ஆட்சியினர் தங்களை ஏமாற்றிக் கொள்கி றார்களோ இல்லையோ, தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கி றார்கள்.


வில்சன் கொல்லப்பட்ட இந்த வழக்கில் விரைந்து விசாரணையை முடித்து- குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும்

அவர்களுக் குரிய தண்டனை கிடைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 

இது போன்று காவல் துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சோதனைச் சாவடிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி - அங்கு பணியில் இருப்போருக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாதவாறு 

பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உடனடியாக எடுத்திட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings