கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் !

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 170 உயிர்களை பலி வாங்கி உள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது.
கேரளா மாணவிக்கு கொரோனா வைரஸ்


அத்துடன், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 

இதனால் பல்வேறு நாடுகள், சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தீவிர மருத்துவ பரிசோதனை க்கு பிறகே அனுமதிக்கப் படுகின்றனர்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு மருத்துவ வார்டுகள் அமைக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகிக்கப்படும் நோயாளிகள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. 

இதனை மத்திய சுகாதாரத் துறை உறுதி செய்தள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது.


பாதிக்கப்பட்ட மாணவி, திருச்சூர் மருத்துவ மனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக வும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
இந்த மாணவி சீனாவின் உகான் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். சீனாவில் இருந்து இதுவரை 806 கேரளா திரும்பி யுள்ளதாகவும், நேற்று மட்டும் 173 பேர் கேரளா வந்ததாகவும் கூறப் பட்டுள்ளது. 

அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி யுடன் கூடிய 10 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags: