கேக் நல்லாயில்லை என பேக்கரி ஊழியர் கொலை !

0
சென்னையில் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஆர்டர் செய்த கேக் நன்றாக இல்லை எனக் கூறி கடைக் காரர்களோடு 
கேக் நல்லாயில்ததால் பேக்கரி ஊழியர்கள் 2 பேர் கொலை


வாக்குவாதம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் வஞ்சனை வைத்து கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

டிசம்பர் 31, 2019 உலகமே புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த மாலை நேரத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று

தங்கள் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத் திற்கு கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளது.

அந்த பேக்கரியில் புத்தாண்டு விற்பனை காரணமாக பிஸியாக இருந்துள்ளது. இதனால் 5 பேர் கும்பல் ஆர்டர் செய்த ஒரு கேக்கை தயாரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

அவசரத்தி லிருந்த அந்த 5 பேரும் பேக்கரி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் ஒருவழியாக ஆர்டர் செய்த கேக்கையும் கையில் பெற்றுள்ளனர். 

அந்த கேக், 5 பேருக்கும் பிடிக்க வில்லை. சண்டை பெரிதானது, பேக்கரி ஊழியர்கள் புஷ்பராஜ், குமார் என்பவர் களுக்கும் 5 பேருக்குமிடையே தனிப்பட்ட வாக்கு வாதமாக மாறியது.

கூட்டம் கூடி அங்கிருந்து இரு தரப்பினரையும் புறப்படச் செய்தனர். ஆனால் பிரச்சினை அதோடு தீரவில்லை. 

புஷ்பராஜ்ஜும் குமாரும் வீட்டிற்குப் புறப்படும் வரை கடை வாசலில் காத்திருந்த அந்த கும்பல் அவர்கள் புறப்பட்ட வுடன் அவர்களைப் பின் தொடர்ந்தது. 

எரிய பிள்ளை குப்பம் பகுதியில் புஷ்பராஜ்ஜும் குமாரும் சென்று கொண்டிருந்த போது, அந்த 5 பேர் அவர்களைத் தாக்கி யுள்ளனர்.


இந்த தாக்குதலில் சிக்கி பேக்கரி ஊழியர்கள் 2 பேரும் படுகாய மடைந்திருந்தனர். 

அந்த வழியாக வந்தவர்கள் படுகாய மடைந்த இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதி த்திருந்தனர். 

எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

இந்த கொலை வழக்குத் தொடர்பாக காட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 5 பேரையும் தேடி வந்தனர். 

இந்நிலையில் அஜித், ஸ்டாலின் உள்பட 5 இளைஞர் களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சிலரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)