காதலியை 31 இடங்களில் குத்தி கொன்ற 30 வயது காதலன் !

0
"என் உறவு வேணாமா.. என்கிட்ட பேசமாட்டியா" என்று ஆத்திர மடைந்த 30 வயது இளைஞர், 40 வயது கள்ளக்காதலி ஷைலாவின் கழுத்து, மார்பு தோள்பட்டை என 31 இடங்களில் கத்தியால் சரமாரி குத்தி கொன்றுள்ள பயங்கரம் நடந்துள்ளது.
கள்ளக்காதலி


கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்துள்ள பகுதி அஞ்சுமுக்கு... அங்கு வசித்து வந்த தம்பதி ஷெரீப் - ஷைலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ஷெரீப் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.. ஷைலாவுக்கு 40 வயதாகிறது..

அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான அனீஷ் என்ற லாரி டிரைவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.

புதுவீடு

வெளிநாட்டில் இருந்து ஷெரீப் உழைத்து சம்பாதித்து அனுப்பி கொண்டே இருந்துள்ளார்... மனைவிக்கு ஒரு புது வீடும் கட்டி கொடுத்துள்ளார்.. 

அந்த புது வீட்டில் தான் அனீஷ்-ஷைலா இருவருமே குழந்தை களுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.. இது சொந்தக் காரர்களுக்கு தெரிய ஆரம்பித்ததும் ஷைலாவை எச்சரித்துள்ளனர்.. 

அறிவுறுத்தி உள்ளனர்.. ஆனாலும் ஷைலா அனீஷ் உறவை துண்டிக்கவே இல்லை.

விவாகரத்து

விஷயத்தை உறவினர்கள் வெளிநாட்டில் இருந்த கணவனுக்கு தெரியப் படுத்தினர்.. இதை கேட்டு அதிர்ந்து போன ஷெரீப், இப்படிப்பட்ட மனைவி தனக்கு தேவை யில்லை என்று முடிவெடுத்து, விவாகரத்து செய்ய துணிந்தார். 

தான் எது சொன்னாலும் இதுவரை நம்பி வந்த கணவர், இப்படி திடீரென விவாகரத்து செய்ய முடிவெடு த்ததும் அதிர்ந்து போய் விட்டார்.

திருந்தி வாழ முடிவு

அதனால், கள்ளக்காதலை விட்டு விட்டு திருந்திவாழ முடிவு செய்தார் ஷைலா.. இதனால் அனீஷ் உறவை துண்டித்தார்.. வீடு வரை வருவதை தடுத்தார்.. இது அனீஷூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

போன் செய்தாலும் ஷைலா அதை எடுத்து பேசாமல் தவிர்த்தார். தன் குழந்தைகளின் நலனுக்காக எக்காரணத்துக் காகவும் அனீஷூடன் உறவு கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

சரமாரி குத்து
காதலியை குத்தி கொன்ற காதலன்


இந்த சமயத்தில், சம்பவத்தன்று மகளை ஸ்கூலில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் ஷைலா..

அப்போது திடீரென வழியை மறித்து கொண்டு நின்ற அனீஷ், தகராறில் ஈடுபட்டார்.. 

"ஏன் என்னிடம் பேசுவதில்லை.. என்னால் உன்னை மறக்க முடியவில்லை" என்று தகராறு செய்தார்..

ஆனால் ஷைலா, "இனி என்னுடன் பேச வேண்டாம்.. எங்க வீட்டில் நிறைய சிக்கல்.. 

இனிமேல் தன்னை சந்திக்கவோ, போன் செய்யவோ வேண்டாம்" என்று சொல்லி உள்ளார்... இதனால் இருவருக் குள்ளும் தகராறு அதிகமாகி உள்ளது.

கைது

வாக்குவாதம் முற்றிப்போய், இறுதியில் ஷைலாவின் கழுத்து, மார்பு தோள்பட்டை என 31 இடங்களில் சரமாரியாக ஆத்திரம், ஆவேசத்தில் கத்தியால் குத்தினார்.. 

இதில் அலறி துடித்து.. ரத்த வெள்ளத்தில் ஷைலா சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஷைலாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர்.. 

ஆனால், ஷைலா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டனர். பின்னர், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் அனீஷ் சுற்றி வந்த நிலையில், அதனை பறிமுதல் செய்த போலீசார், அனீஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)