சென்னையில் ஆபாச படம் எடுத்தவரை கொலை செய்த பெண் !

0
நெருக்கமாக இருக்கும் படத்தை காட்டி மிரட்டி, திருமணத்தை தடுக்க நினைத்த வரை, கத்தியால் குத்தி பெண்ணே, கொலை செய்த சம்பவம் சென்னை வண்ணார ப்பேட்டையில் நடந்துள்ளது.
ஆபாச படம் எடுத்தவரை கொலை செய்த பெண்


சென்னை துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே ரத்த வெள்ளத்தில் சடலம் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் புதுவண்ணாரப் பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

50 வயது மதிக்கத் தக்க சடலத்தை மீட்டு, போலீசார் விசாரணையை தொடங்கினர். 

அப்போது, சடலமாக கிடந்தவர், திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த சேகர் என்கிற அம்மன் சேகர் என்பதும், இவர் கற்பூர வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், முறை தவறிய உறவு காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்துள்ளது. 

மகளின் தோழியான 22 வயது பெண்ணு க்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டு களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் காதல் ஏற்பட்டு, இரு வீட்டாரும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.


அப்போது, தன்னுடன் இளம்பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங் களை காட்டி, குடும்பத்தினரை சேகர் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

சேகரின் பிறந்த நாளை கொண்டாடுவ தற்காக நேற்றிரவு காதலியுடன் அடையாறு சென்றுள்ளார். 

பின்னர் வழக்கமாக அவர்கள் சந்திக்கும், துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே வந்து சேகரை, அந்த பெண் கண்களை மூடச் சொல்லி யுள்ளார்.

அப்போது பெவி குயிக்கை எடுத்து சேகரின் கண்ணில் கொட்டிய இளம்பெண், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள தாக விசாரணை யில் தெரிய வந்துள்ளது. 

அந்த பெண்ணை பிடித்துள்ள போலீசார், இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings