இந்த மாதம் நடைபெற இருந்த TNPSC தேர்வு ஒத்திவைப்பு !

0
வரும் 22 முதல் 30 ந் தேதி வரை நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்ட அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் வரும் ஜனவரி 5ந் தேதி முதல் 12ந் தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
TNPSC தேர்வு ஒத்திவைப்பு !


வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வரும் 22 முதல் 30 வரை தேர்வுகளை அறிவித்திருந்தது. 

இந்நிலையில், அந்நாட்களில் குரூப் 1 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. 

தேர்தலை யடுத்து ஜனவரி 5ந் தேதி முதல் 12ந் தேதிவரை நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ் சி. தெரிவித்துள்ளது.

விண்ணப்ப தாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு 

தங்களது நுழைவுச் சீட்டினை 27.12.2019 முதல் 12.01.2020 வரை www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் டி.என்.பி.எஸ் சி. அறிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)