பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிய சைக்கோ - அச்சத்தில் மக்கள் !

0
பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிச் செல்லும் நபரால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 
பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிய சைக்கோ


சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ளே நுழைந்த மர்மநபர், அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள 

ஒவ்வோரு வீட்டின் ஜன்னலாக திறந்து பார்த்து கையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை திருடிச் சென்றுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் காலையில் எழுந்து பார்த்த போது மூடிய ஜன்னல் திறந்திருப்பதும், பெண்களின் ஆடைகள் திருடு போனதும் தெரிய வந்தது. 

குடியிருப்பு வாசிகள் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்து பார்த்த போது 

இன்று அதிகாலை 3.30 மணியவில் மர்மநபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல்களை திறந்து பார்த்தது தெரிய வந்தது.

இதை யடுத்து குடியிருப்புவாசிகள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் சைக்கோ யார்? 

எதற்காக பெண்களின் ஆடைகளை திருடுகிறார் என போலீசார் தீவிர விசாரணை யில் இறங்கி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings