திருமணத்தில் நடனம் ஆடும் பெண் மீது துப்பாக்கிச் சூடு !

0
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்கள் சிறிது நேரம் ஆடாமல் நின்றனர். 
திருமணத்தில் நடனம் ஆடும் பெண் மீது துப்பாக்கிச் சூடு !
அப்போது, பின்னால் இருந்து ஒருவர் தொடர்ந்து ஆடுங்கள் என்கிறார். அவர், குடித்திருப்பது தெரிகிறது. அந்தப் பெண் எதிர்பாராத நேரத்தில் பெண்ணின் முகத்தில் துப்பாக்கி யால் சுடுகிறார்.

பெண்ணின் தாடையில் குண்டு பாய்ந்தநிலையில், பெண் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அவருடன் சேர்ந்து ஆடிய பெண் ஓடிச் சென்று உதவ முயற்சி செய்கிறார். 

திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றுள்ளது. 

கிராமத் தலைவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

காவல்துறை சார்பில், அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

விரைவில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரைக் கைது செய்வோம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings