காவல் நிலையங்களில் மின்சாரத்தை துண்டித்த மின்சார வாரியம் !

0
பஞ்சாப் மாநிலத்தில் அரசுத் துறை அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகள என பல்வேறு அரசு கட்டிடங்களுக் கான மின் கட்டணம் செலுத்தப் படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. 
மின்சாரத்தை துண்டித்த மின்சார வாரியம்


இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், பணம் செலுத்தப்பட வில்லை.

இதை யடுத்து பஞ்சாப் மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டது. அரசு அலுவலகங் களிக்கான மின்சப்ளையை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அவ்வகையில் லூதியானாவில் உள்ள 10 முதல் 14 காவல் நிலையங்களில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மின்சாரம் இல்லாததால் காவல் நிலையங்கள் வெளிச்சம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. விரைவில் கட்டணத்தை செலுத்தி, மின்சப்ளை பெறுவதற் கான நடவடிக்கையை உயர் அதிகாரிகள் மேற்கொண் டுள்ளனர்.

மக்களை பாதிக்கும் என்பதால் பள்ளிகள் மற்றும் மருத்துவ மனைகளுக் கான மின்சாரத்தை மின்சார வாரியம் துண்டிக்காமல் விட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings