இளைஞரின் காரை பார்த்து திக்குமுக்காடி போன போலீஸ் ஏன் தெரியுமா?

இளைஞர் ஓட்டி வந்த காரை பார்த்து, போலீஸ் அதிகாரி ஒருவர் ஆச்சரியத்தில் திக்கு முக்காடி போனார். அது ஏன்? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
திக்குமுக்காடி போன போலீஸ்


இந்தியாவை பொறுத்த வரை வாகனங்களை மாடிபிகேஷன் செய்வது சட்ட விரோதமாக பார்க்கப் படுகிறது. வாகனங் களை மாடிபிகேஷன் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றமே உத்தர விட்டுள்ளது. 

எனவே ஆல்டர் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் போலீசார் கடுமையான நடவடிக்கை களை எடுத்து வருகின்றனர்.

சட்ட விரோதமான செயல்பாடு என்பதால், கார் மாடிபிகேஷன் களை போலீசார் ஊக்குவிப்ப தில்லை. ஆனால் அதற்கு மாறாக முற்றிலும் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 

ஹெவியாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட ஹூண்டாய் சாண்ட்ரோ கார் ஒன்று போலீஸ் அதிகாரி ஒருவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அந்த போலீஸ் அதிகாரி அந்த காரை நிறுத்தி யுள்ளார்.

மேலும் அந்த காரில் அவர் ஜாலியாக ஒரு ரவுண்டும் சென்று விட்டு வந்துள்ளார். மாடிபிகேஷன் செய்யப்பட்ட ஹூண்டாய் சாண்ட்ரோ காரில், இளைஞர்கள் ஜாலியாக ரவுண்டு அடித்து கொண்டிருந்தனர். 

அப்போது செக் போஸ்ட்டில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த காரை பார்த்து நிறுத்தி யுள்ளார். அந்த கார் முற்றிலும் வித்தியாசமான முறையில் மாடிபிகேஷன் செய்யப் பட்டிருந்தது.

அதாவது அந்த கார் மிகவும் சிறியதாக மினி காராக மாற்றப்பட்டிருந்தது. இதனால் அந்த காரை பார்த்து போலீஸ் அதிகாரி ஆச்சரியத்தில் மூழ்கி விட்டார். 

போலீஸ் அதிகாரி ஆச்சரியமாக அந்த கார் பற்றி விசாரித்த தால், அந்த காரின் உரிமையாளர் போலீஸ் அதிகாரியை ஒரு ரவுண்டு சென்று விட்டு வர அனுமதித்தார். இதன் பின் அந்த காரை பற்றி போலீஸ் அதிகாரி பாராட்டி பேசினார். 
மேக்னெட்டோ 11-ஆல் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது


அந்த காரை தான் அடிக்கடி பார்ப்பேன் எனவும், ஒவ்வொரு முறையும் காரை நிறுத்தி அதனை முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க விரும்பிய தாகவும் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 

முதல் தலைமுறை சாண்ட்ரோ அடிப்படையில் இந்த கார் உருவாக்கப் பட்டுள்ளது. மேக்னெட்டோ 11-ஆல் இந்த கார் உருவாக்கப் பட்டுள்ளது. 

இந்த கார் எப்படி உருவாக்கப் பட்டது? என்பது தொடர்பான வீடியோவும் வெளியிடப் பட்டுள்ளது. உண்மையான முழு காரை பாதியாக 'கட்' செய்து இந்த மினி காரை உருவாக்கி யுள்ளனர்.

இந்த மினி காரை உருவாக்க சுமார் 25 நாட்கள் ஆனதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த காரின் கேபினும் அருமையாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

இந்த காரில் இரண்டு இருக்கைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. வீல் பேஸ் மிகவும் சிறியதாக இருப்பதால், இரண்டு பேருக்கு மட்டுமே இந்த காரில் இடமுள்ளது.

ஆனால் அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தான் இடம் பெற்றுள்ளன. மெக்கானிக்கல் ரீதியாக இந்த காரில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்பட வில்லை. 

ஆனால் ஆர்டிஓ ஒப்புதல் அளிக்காவிட்டால் இதுபோன்ற மாடிபிகேஷன்கள் சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

உண்மையில் வாகனத்தில் கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ளப் படும் இத்தகைய மாடிபிகேஷன்கள் மிகவும் ஆபத்தானது என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டி யுள்ளது.

இதுபோன்று மாடிபிகேஷன்களை செய்தால், சாலையில் ஓட்டுவதற்கு உகந்தது தான் என்பதை நிரூபிக்க அராய் நடத்தும் தேர்வுகளில் மீண்டும் பாஸ் ஆக வேண்டும். 
சாலையில் ஓட்டுவதற்கு உகந்தது


இங்கே இந்த வாகனத்தின் ஆவணங்களை போலீஸ் அதிகாரி கேட்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இது போன்று மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்து விடுவார்கள்.

எனினும் அதற்கு மாறாக இங்கே போலீஸ் அதிகாரி ஒருவர் ஜாலியாக ரவுண்டு சென்று விட்டு வந்துள்ளார். அவரை போலவே நாமும் இந்த காரை பாராட்டி தான் ஆக வேண்டும். 

இது போன்று மாடிபிகேஷன் செய்யும் எண்ணம் மற்றும் திறன்கள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான். எனினும் மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை கவனமாக தான் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மறந்து விட கூடாது.

குறிப்பாக கட்டமைப்பு ரீதியாக மாடிபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை கவனமாக கையாள்வது அவசியம். இது போன்ற வாகனங்களிடம் நீங்களும் எச்சரிக்கை யாக இருப்பது நல்லது. 

ஏனெனில் இது போன்ற வாகனங்களின் கட்டமைப்பு வலுவாக இருக்காது. அது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது குறித்து மாஸ்டர் பட்டர் வெளியிட்டுள்ள வீடியோவை காணலாம்.
Tags:
Privacy and cookie settings