அமெரிக்காவில் இருந்து வந்த மருமகளை அடித்து கொன்ற மாமியார் !

0
மகாராஷ்டிரா மாநிலத்தின் வசாய் நகரின் மாணிக்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி மனே (வயது 48). இவரது மூத்த மகன் ரோகன் மனே தனது மனைவி ரியா மனேவுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 
மருமகளை அடித்து கொன்ற மாமியார்


6 வருடங்களுக்கு பிறகு ரோகன் - ரியா தம்பதியினர் கடந்த 1ம் தேதி இந்தியா வந்தனர்.

மாமியார் - மருமகள் இடையேயான வழக்கமான சண்டை ஆனந்தி மற்றும் ரியா இடையே அடிக்கடி நடந்துள்ளது.

நேற்று காலை ரோகன் மனே நடை பயிற்சிக்காக காலையிலேயே வெளியே சென்றிருந்தார். அப்போது மாமியார் மருமகள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

இதனால் கோபமடைந்த ஆனந்தி மனே அங்கிருந்த இரும்பு பூந்தொட்டியை எடுத்து தனது மருமகளை அடித்தார். தலையில் தாக்கப்பட்ட ரியா மனே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை யடுத்து ஆனந்தி மனே மாணிக்பூர் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரியா மனேவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


‘ஆனந்தி மனே- ரியா மனே இடையே சில சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளன.

தனது மகனையும், பேரக்குழந்தை களையும் தன்னிட மிருந்து ரியா மனே பிரித்து சென்று விடுவார் என்ற எண்ணம் ஆனந்தியிடம் இருந்தது. 

மருமகளை கொலை செய்த ஆனந்தி சில தூக்க மாத்திரை களையும் சாப்பிட்டிருந்த காரணத்தால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். 

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என போலீசார் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings