கேரளாவை சேர்ந்த மாணவர்கள் துபாய் சாலை விபத்தில் பலி !

0
துபாயில் வாழும் இரு இந்தியர்கள் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் ரோஹித் கிருஷ்ணகுமா ர்(19), சரத் குமார் (21). 
கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சாலை விபத்தில் பலி


கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர்கள் இருவரும் துபாயில் உள்ள டெல்லி பள்ளியில் கல்வியை முடித்து விட்டு பட்டப் படிப்புக்காக வெளிநாடு களுக்கு சென்றனர்.

இவர்களில் ரோஹித் கிருஷ்ணகுமார் பிரிட்டன் நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்திலும் சரத் குமார் அமெரிக்கா வில் உள்ள பல்கலைக் கழகத்திலும் பயின்று வந்தனர். 

கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருவரும் குடும்பத்தாரை பார்ப்பதற் காக சமீபத்தில் துபாய் வந்துள்ளனர்.

நேற்றிரவு கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்று விட்டு காரில் திரும்பிய போது விபத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)