மொடக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு !

0
மொடக்குறிச்சி அருகே உள்ள செல்லாத்த பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவருடைய மனைவி ஜோதி (40). 2 பேரும் கட்டிட தொழிலாளர்கள். 
மொடக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு


இவர்களுடைய மகன் விவேக் (21). இவர் நஞ்சை ஊத்துக் குளியில் உள்ள தனியார் தொழிற் சாலையில் தொழிலாளி யாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்ததும் செல்வராஜ் மாலையில் வீ்ட்டுக்கு வந்து உள்ளார். 

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பதற்றத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப் பட்டிருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் ரூ.18 ஆயிரத்தை காணவில்லை. 

ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பட்டப் பகலில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


இதே போல் புஞ்சை புளியம்பட்டி டாணாபுதூர் அவினாசி சாலையில் வசித்து வரும்

ராம்சன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மொபட் திருடப்பட்டது. 

மேலும் மேட்டுப் பாளையம் சாலையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினசாமி (60),

அவினாசி சாலையில் வசித்து வரும் திருநங்கை ஓவியா (25) ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந் துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings