கோவையில் 7 பேருக்கு மறுவாழ்வு அளித்த மூளைச்சாவு அடைந்த பெண் !

0
கோவை மணியக்காரன் பாளையம் பாலமுருகன் நகர் 2-வது வீதியில் வசித்தவர் சாந்தமணி (வயது 50). ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக்கசி வுடன் கோவை. 
7 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்


கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரி யில் மூளைச்சாவு அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது மகன்கள் சதீஷ்குமார், தனசேகர் ஆகியோர் சாந்தமணி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். 

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள், ஆகியவை தானமாக பெறப்பட்டது.

நுரையீரல், கல்லீரல், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி க்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி க்கும் வழங்கப்பட்டது. 

கே.எம்.சி.எச். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளு க்கு பொருத்து வதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பி வைத்தனர். 

உடல் உறுப்பு தானம் வழங்கிய சாந்தமணி குடும்பத்திற்கு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி தலைவர் நல்லா ஜி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)