உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரின் பல்கரான்பூர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவி களுக்கு சுகாதார முகாம் நடந்தது.
இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அவர்களை ஆசிரியர் ஒருவர் திட்டி யுள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள், பாதுகாவலர் களை அழைத்து கொண்டு சென்று ஆசிரியர் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கியதில் ஆசிரியர் தரையில் சுருண்டு விழுகிறார்.
அப்போதும் அந்த கும்பல் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஆசிரியர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகினற்னர்.
Thanks for Your Comments