பொதுவாக மழை நேரங்களில் காட்டுக்குள் இருக்கும் சிறு சிறு பூச்சிகள், பாம்புகள் போன்றவை மக்கள் வசிக்கும் இடத்திற்கு வருவது வழக்கமான ஓன்று.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் மாயூர்ப் மாவட்டத்தில் உள்ள பாரிபாடா என்ற ஊரில், பெண்ணொரு வரின் வீட்டிற்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
குறிப்பிட்ட அந்த பெண் சமைப்பதற் காக வீட்டின் சமையல் அறைக்குள் சென்ற போது அங்கு வழக்கத்திற்கு மாறாக சத்தம் கேட்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
என்ன சத்தம் என்று தேடி பார்த்த அவருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டறிய முடிய வில்லை.
உடனே இது குறித்து தனது குடும்பத்தி னருக்கு அவர் தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்த பாத்திரங் களை அகற்றி பார்த்ததில் கொடூர விஷம் கொண்ட நாக பாம்பு ஓன்று படம் எடுத்தபடி சீறியுள்ளது.
இதனால் பயந்து போன குடும்பத்தினர் இது குறித்து வனதுறைக்கு தகவல் கொடுக்க, அங்கு வந்த அதிகாரிகள் பாம்பை பிடித்து காட்டிற்குள் விட்டனர்.
Thanks for Your Comments