முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓமலூரில் இன்று செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாகன தணிக்கையின்போது காவல் துறைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
நீதிமன்ற உத்தரவின் படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது.
கட்சிகளின் கொடி கம்பங்களை நடக்கூடாது என்ற உத்தரவு இதுவரை இல்லை.
கட்சிகளின் கொடி கம்பங்களை நடக்கூடாது என்ற உத்தரவு இதுவரை இல்லை.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் அரசுக்கு தொடர்பு இல்லை.
தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப் பட்டது. மாநகராட்சி மேயர்களை மக்களே நேரடியாக தேர்ந்து எடுப்பார்கள். மறைமுக மாக தேர்வு செய்யப்பட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments