ஆந்திராவில் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம் !

0
ஆந்திர பிரதேச அரசாங்கத்தின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகள், மண்டல் பரிஷத் பள்ளிகள் மற்றும் 
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி


ஜில்லா பரிஷத் பள்ளிகளில் அனைத்து வகுப்புக ளிலும் ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதன்படி வரும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையும்,

அதற்கடுத்த தாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு களுக்கும் ஆங்கில வழி கல்வி அறிமுகப் படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கான முன்னேற் பாடுகளை மேற்கொள்ளு மாறு பள்ளி கல்வி ஆணை யத்திற்கு ஆந்திர அரசாங்கம் உத்தர விட்டுள்ளது. 


மேலும் அனைத்து அரசு பள்ளிகளில் தெலுங்கு அல்லது உருது மொழிப்பாடம் கட்டாயப் பாடமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர் களுக்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்துவதற் கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும், 

ஆங்கில புலமைக்கான தேர்வுகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings