புதைகுழியில் சிக்கி பேருந்து நடத்துனர் உயிரிழப்பு !

0
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள நாலாந்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா ( 48). இவர் சிதம்பரம் அரசு போக்கு வரத்து கிளையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். 
புதைகுழியில் சிக்கி பேருந்து நடத்துனர் உயிரிழப்பு

இவரது மனைவி ஜெயகாந்தி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஞாயிறன்று ஜீவா தனது மகன்கள் 2 பேரையும் அழைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள வெள்ளாற்று க்கு குளிக்க சென்றுள்ளார். 

வெள்ளாற்றில் தண்ணீரில் ஜீவாவின் 2 மகன்களும் குளித்துக் கொண்டிருந் தனர்.

அப்போது ஆற்றில் இருந்த புதைகுழி யில் ஜீவாவின் 2 மகன்களும் சிக்கி, காப்பாற்ற கூறி கூச்சலிட் டுள்ளனர். 

மகன்களின் அலறல் சத்தம் கேட்டு குளித்துக் கொண்டிருந்த ஜீவா வேகமாக சென்று 2 மகன் களையும் மீட்டார். 

ஆனால் அவர் புதைக்குழிி யிலிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக் கொண்டார். சிறிதுு நேரத்தில் அவர் புதைகுழிி யில் சிக்கி தண்ணீரில் முழ்கி உயிரிழந்தார். 

கரையில் நின்ற 2 மகன் களும் தங்களின் தந்தை தண்ணீரில் மூழ்கியதை அறிந்ததும் ஊருக்குள் ஓடி சென்று அங்கு இருந்தவர்் களிடம் நடந்த விபரத்தை கூறி யுள்ளனர். 

இதனை யொடுத்து பொது மக்கள் வெள்ளாற்று பகுதிக்கு ஓடி சென்று புதைக்குழி யில் சிக்கி உயிரிழந்த ஜீவாவின் உடலை மீட்டனர்.

இது குறித்து புவனகிரி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings