மதுபானம் இரு மடங்கு உயர்வு !

0
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமை யிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. 
மதுபானம் இரு மடங்கு உயர்வு

அங்கு ஜெகன் மோகன் ரெட்டி, தான் தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றி வருகிறார்.

இதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்த ருந்தார்.

ஆந்திராவில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத் தப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார்.

அதன்படி மதுபான கடைகளை அரசே கையகப் படுத்தி நடத்தி வருகிறது.

இந்த கடைகள் மாநில பானங்கள் கார்ப்பரேசன் லிமிடெட் கீழ் கடந்த அக்டோபர் 1-ந்தேதி முதல் இயங்கி வருகிறது. பார்களை நடத்த தனியாருக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே ஆந்திராவில் மதுபானக் கடைகளின் எண்ணிக் கையை குறைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறும் இந்த திட்டத்திற் கான விதிமுறை களை வகுப்பதற் காகவும் 
மனு பானம் விலை உயர்வு

நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற் காகவும் செயல் முறையை உருவாக்க வேண்டும் என்றும் அதிகாரி களுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தர விட்டார்.

இந்த நிலையில் ஆந்திராவில் மதுபானங் களின் விலை இரு மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது.

மேலும் அனைத்து பார்களுக்கும் வழங்கப்பட்ட லைசென்ஸ் ரத்து செய்யப் படுவதாக அரசு அறிவித் துள்ளது.

இதற்காக புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி உள்நாட்டு மதுபானங் களில் குவாட்டர் பாட்டில் ரூ.60 ஆகவும், 375 மி.லிட்டர் ரூ.120 ஆகவும், 

750 மி.லிட்டர் ரூ.240 ஆகவும், 1000 மி.லிட்டர் ரூ.300 ஆகவும், 2000 மி. லிட்டர் ரூ.750 ஆகவும், இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. மினி பீர் ரூ.30 லிருந்து ரூ.60 ஆக அதிகரி க்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் மதுபானம் விலை

பீர் விலையில் 330 மி.லிட்டர் ரூ.30, 650 மி.லிட்டர் ரூ.60, 30 ஆயிரம் மி.லிட்டர் ரூ.3 ஆயிரம், 50 ஆயிரம் மி.லிட்டர் ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

2 ஆண்டுகள் பார் நடத்துவ தற்கான லைசென்ஸ் பெற அறிவிப்பு வெளியிட் டுள்ளது.

அதில் பார் பதிவு கட்டணம் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. 

50 ஆயிரம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதியில் பார் நடத்த லைசென்ஸ் கட்டணம் ரூ.25 லட்சமாக அதிகரிக் கப்பட்டு இருக்கிறது.

அதே போல் 50,001 லிருந்து 5 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட பகுதியில் பார் லைசென்சு க்கு ரூ.50 லட்சமா கவும்

5 லட்சத்து க்கு மேல் மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ரூ.75 லட்சமா கவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
நட்சத்திர ஓட்டல்களில் பார்

நட்சத்திர ஓட்டல்களில் பார் நடத்த லைசென்ஸ் கட்டணம் ரூ.1½ கோடி என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி 40 சதவீத பார்கள் மூடப்பட்டு கின்றன. தற்போது 797 பார்கள் செயல்பட்டு வந்தன. 

இதில் 478 பார்களுக்கு மட்டும் புதிய லைசென்சு க்கு விண்ணப்பிக்க உத்தரவு பிறப்பிக் கப்பட்டு உள்ளது.  இதன் மூலம் 319 பார்கள் மூடப்பட்டு கின்றன. 

ஏற்கனவே ஆந்திர அரசு 700 மதுபான கடைகளை மூடியது என்பது குறிப்பிடத் தககது. தற்போது அங்கு 3500 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings