உடம்பில் தானாக சுரக்கும் 'பீர்' புதுசா இருக்குல்ல - மருத்துவர்கள் !

0
விசித்திர நோயால் ஒருவருக்குத் தானாக உடம்பில் பீர் சுரப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கோரலினா பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 
உடம்பில் சுரக்கும் பீர்


அந்த வழியே வந்த நபரைச் சோதனை செய்யும் போது குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக் காகக் கைது செய்துள்ளனர்.

ஆனால் அவர் நான் குடிக்க வில்லை எனத் தொடர்ச்சி யாகத் தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடு பட்டுள்ளார். 

இதனை யடுத்து அவரை மருத்துவ மனைக்கு பரிசோதனைக் காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில்,"அந்த நபரின் ரத்தத்தில் மதுவின் அளவு 200 mg/dL இருக்கிறது. அதாவது 10 மதுபானங் களைக் குடிப்பதற்கு சமமான அளவு இருக்கிறது" என்றார்.

இதனால் காவல் துறையினரும், மருத்துவர்களும் இவர் குடிக்க வில்லை எனச் சொல்வதை நம்பாமல் இருந்துள்ளனர். 

மருத்துவ சோதனை முடிவுகள் சாதாரண மாக வந்தாலும், அவரிடையே உடலில் Saccharomyces cerevisiae (பேக்கர்ஸ் ஈஸ்ட்) எனும் பூஞ்சை இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். 


இது குறித்து நிபுணர்களிடம் ஆலோசித்த போது மிகப் பெரிய அதிர்ச்சி அனைவரு க்கும் காத்திருந்தது.

இவர் auto-brewery syndrome (ABS) என்னும் அரிய நோயால் பாதிப்படைந் துள்ளார் எனத் தெரிவித்தார்.

இந்த நோயின் காரணமாகவே அவரது உடலில் புது விதமான பூஞ்சை உருவாகி யுள்ளது.

இதனால் தான் உடலில் உள்ள அனைத்து கார்போ ஹைட்ரேட்ஸ்களும் பீர் ஆக மாறியுள்ளது. 

தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலமாகி யுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 5 நபருக்கு மட்டுமே மருத்துவச் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings