காதல் ஜோடி தான் எங்களின் டார்கெட்... கொள்ளை கும்பலின் வாக்குமூலம் !

0
தஞ்சாவூரில் முகமூடி அணிந்து கொண்டு வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பல் தலைவன் போலீசாரிடம் சிக்கினான். 
காதல் ஜோடி தான் எங்களின் டார்கெட்... கொள்ளை கும்பலின் வாக்குமூலம் !
கல்லூரிக் காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறி செய்ததுடன் மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தேன் எனக் கூறி போலீசாரை அதிர வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

வழிப்பறியில் ஈடுபட்ட பகுதி

தஞ்சாவூர் பிள்ளையார் பட்டி பைபாஸ் சாலை அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் கடந்த பல மாதங்களாக அதிகளவிலான கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. 

குறிப்பாக இந்தச் சாலையின் வழியாகச் செல்லும் கணவன் மனைவி மற்றும் காதல் ஜோடிகளை கொள்ளையர்கள் இலக்காக வைத்துக் கொண்டு அவர்களை வழி மறித்து மிரட்டி நகை மற்றும் பணம் பறித்து வந்தனர். 

இது தொடர்பாக வல்லம் போலீசாருக்கு அவ்வப்போது புகார்கள் வந்தன. கொள்ளை யர்கள் முகமூடி அணிந்திருந்தனர் என நகைகளைப் பறி கொடுத்தவர்கள் கூறியதால் அவர்களைப் பிடிப்பது போலீசாருக்கு சிரமமாக இருந்தது. 

மேலும், இந்தச் சம்பவம் இரவு நேரங்களில் நடந்ததாலும், அப்பகுதி காடாக இருப்பதுடன் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததாலும் கொள்ளை யர்கள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு செயல் பட்டனர். 

ஆனால், இது போன்ற காரணங்கள் தான் போலீசார் கொள்ளையர் களைப் பிடிக்க முடியாமல் போனதுடன் பெரும் சவாலாகவும் அமைந்தது.
சிக்கிய ரமேஷ்

இந்த நிலையில் கடந்த சில நாள்களு க்கு முன்பு தஞ்சையைச் சேர்ந்த கெல்வின் என்ற இன்ஜினீயரை

வழி மறித்து இந்தக் கொள்ளைக் கும்பல் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். 

இது குறித்து வல்லம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து கொள்ளைக் கும்பலைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 
காதல் ஜோடி தான் எங்களின் டார்கெட்... கொள்ளை கும்பலின் வாக்குமூலம் !
குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் தலைமை யிலான போலீசார் பிள்ளையார் பட்டி ரவுண்டானா அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந் தனர். 

அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். ஆனால், அவர் போலீசாரின் கேள்வி களுக்கு முறையாக பதில் சொல்ல வில்லை. 

இதை யடுத்து அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் போலீசாரே திடுக்கிடும் அளவிற்குப் பல தகவல்களை அந்த வாலிபர் கூறி யிருக்கிறார்.

இது தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போலீசாரிடம் பேசினோம், ``தஞ்சை பிள்ளையார் பட்டி பைபாஸ் சாலைப் பகுதியில் தொடர்ந்து வழிப்பறிச் சம்பங்கள் நடைபெற்று வந்தன. 

இது தொடர்பாக எங்களுக்குப் புகார்கள் வந்து கொண்டே இருந்தன. இதில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் உத்தர விட்டார். 
மாவட்ட எஸ்.பி மகேஸ்வரன் மேற் பார்வையில் தனிப்படை அமைக்கப் பட்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடு பவர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

வழிப்பறிச் சம்பவம் நடைபெற்ற பகுதி

இதில் மானோஜி பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவன் சிக்கினான். அவனைக் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணை யில் தொடர்ந்து நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் தலைவன் ரமேஷ் எனத் தெரிய வந்தது. 

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ``நான், எனது நண்பர்கள் மூன்று பேர் தினமும் பிள்ளையார் பட்டி பைபாஸ் சாலைப் பகுதிக்கு இரவு 7 மணிக்கு வந்து விடுவோம். 

இரவு 10 மணி வரை இருட்டான அந்தப் பகுதியில் மறைந்து நின்று கொண்டு அந்த வழியாக இரு சக்கரத்தில் வருபவர்களை முகமூடி அணிந்து கொண்டு வழிமறித்து ஆயுதங் களைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்து விடுவோம்.

மேலும், தஞ்சைப் பகுதியில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மாலை நேரத்திற்கு மேல் தங்களது காதலிகளை அழைத்துக் கொண்டு இந்த ஏரியாவிற்கு வந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருப்பர். 

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நானும் எனது நண்பர்களும் காதல் ஜோடிகளிடம் சென்று மிரட்டி பணத்தையும், நகையையும் பறித்துக் கொள்வோம். 

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் போது நாங்கள் போதையில் தான் இருப்போம். அதனால் எதையும் தைரியமாகச் செய்வோம்.

வழிப்பறி நடைபெற்ற பகுதி
காதல் ஜோடி தான் எங்களின் டார்கெட்... கொள்ளை கும்பலின் வாக்குமூலம் !
யாருக்கும் தெரியாமல் வரும் காதல் ஜோடிகள் நிச்சயம் புகார் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று பெரும்பாலும் அவர்களை குறி வைத்தே காய்களை நகர்த்துவோம். 

அப்போது பல தடவை கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறோம். மேலும் பணம் நகை பறிப்போமே தவிர செல்போன் களைப் பறிக்க மாட்டோம். 

ஏன் என்றால் செல்லைப் பறித்தால் அதை வைத்து எங்களை ஈஸியாகப் பிடித்து விடுவீர்கள் என்பதால் பறிக்க வில்லை'' எனக் கூறி அதிர வைத்தான். 

ஆனால் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரும் புகார் தரவில்லை. கொள்ளை யடித்த நகைகளை வங்கியில் அடகு வைத்து ஜாலியாக இருந்திருக் கிறார்கள். 

ரமேஷ் கூறிய தகவலை வைத்து இதில் தொடர்புடைய அவனுடைய நண்பர்கள் 3 பேரை தேடி வருகிறோம். அவர்களையும் பிடித்த பிறகு நடத்தப்படும் விசாரணையில் முழு விவரம் தெரிய வரும்" என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)