லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையன் சிக்கினான் !

0
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவத்தில், திருவாரூர் மாவட்டத்தில் ஒருவன் நகைகளுடன் சிக்கியுள்ள தாகவும்,
லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையன் சிக்கினான் !
அவனிடமிருந்து அதே கடையில் இருந்து கொள்ளை யடிக்கப்பட்ட 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதா கவும் தகவல்க வெளிவந்துள்ளது

திருச்சி லலிதா ஜூவல்லரி யில் 28 கிலோ நகைகள் கொள்ளை யடிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 5 கிலோ பிடிபட்டுள்ள தால் மீதி நகைகளும் விரைவில் பிடிபடும் என எதிர் பார்க்கப் படுகிறது
திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். 

அதில் இருந்த ஒருவன் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட, மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். 

அவன் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் ஏராளமான தங்கநகைகள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
இந்த நகைகளில் ஒட்டப் பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்ட போது அந்த நகைகள் லலிதா ஜூவல்லரி யில் கொள்ளை யடிக்கப் பட்டது தெரிய வந்தது. 
எந்த நோய்க்கு எந்த ரத்த பரிசோதனை !
கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. 

இதை யடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணி கண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். CTN..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings