விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன் - ஜனாதிபதி !

0
விவசாயிகள் வாழ்க்கை தரம் உயர்த்த நடவடிக்கை... ஜனாதிபதியாக தேர்ந்தெடுக் கப்பட்ட பின்னர் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதற்கான நடவடிக்கை களை எடுப்பேன் 
விவசாயிகள் வாழ்க்கை தரம்


என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித் துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய விவசாயக் கொள்கை கொழும்பில் வெளிப்படுத்தப் பட்டது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் விவசாயத் துறையில் மாற்றத்தை கொண்டுவரவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதுமே தனது நோக்கம் என கூறினார்.


மேலும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான மற்றும் உத்தரவாத விலைகளை நிர்ணயிப்ப தாகவும் உறுதியளித்தார்.

அத்தோடு நாட்டில் வெவ்வேறு பருவங்களில் விலைகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, இது போன்ற விலை ஏற்ற இறக்கங்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும் சாடினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings