இரட்டை சகோதரிகள் கொண்டாடிய பிறந்த நாள் !

0
நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்... பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் 2 பேர் தங்களது நூறாவது பிறந்த நாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
இரட்டை சகோதரிகள்


பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஃபே - டி- ப்ரெடக்னே நகரில்

கடந்த 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இருவரும் பிறந்தனர். அவர்களின் பெயர், மேரி லீமேரி, ஜெனிவிவி போலிகான்ட் ஆகும்.

அவர்களின் நூறாவது பிறந்த தினம் உறவினர்கள், நண்பர்களால் உற்சாக மாக கொண்டாடப் பட்டது.

இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, சகோதரிகள் 2 பேரும் கேக்குகளை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.

மதுபழக்கம் இல்லாதது, குடும்ப உறுப்பினர் களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது ஆகியவையே தங்களது நீண்ட நாள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென்று சகோதரிகள் 2 பேரும் தெரிவித் துள்ளனர்.

போலி கான்ட்டுக்கு 4 வாரிசுகளும், 11 பேர குழந்தைகளும், 16 கொள்ளு பேர குழந்தைகளும் உள்ளனர். லீமேரிக்கு 2 வாரிசுகளும், ஒரு பேர குழந்தையும், 3 கொள்ளு பேர குழந்தைகளும் உள்ளனர்.
சிங்கப்பூரில் கூரை நீச்சல் குளம்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings