என்னைய்யா நடக்குது இங்க - டார்ச்சரால் சிறுமிக்கு திருமணம் !

0
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், அதை தாங்க முடியாமல் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். 
செக்ஸ் டார்ச்சரால் திருமணம்



இது குறித்து, கிடைத்த ரகசிய புகாரால் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மணப்பெண் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் 2 வாலிபர் களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை யடுத்து அந்த கிராமத்திற்கு சென்று மணப்பெண்ணாக இருந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அதிகாரி களிடம் அந்த சிறுமி கூறியதாவது: 

மங்கூன் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் ரஞ்சித் (25), கலியபெருமாள் மகன் பாபு (23) ஆகிய இருவரும் தனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். 



எனவே தான் எனக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர் என கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி யடைந்த சமூக நலத்துறை அதிகாரிகள், இது குறித்து பாடாலூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் ரஞ்சித், பாபு ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 
சிறுமிக்கும் இப்போது திருமணம் செய்யக் கூடாது, 18 வயது நிரம்பிய பிறகு தான் திருமணம் நடத்த வேண்டும் என சிறுமியின் பெற்றோரிடம் அதிகாரிகள் அறிவுரை கூறினர். எனவே திருமணம் நிறுத்தப் பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)