மோடி பற்றி ஜோதிடம் கூறிய நபர் கைது !

0
அசாம் மாநிலம் போர்பாக் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் சர்மா (வயது 35) இவர் எதிர் காலத்தில் நடக்கும் சம்பவங்களை ஜோதிடமாக கணித்து இணைய தளங்களில் வெளியிடுவது வழக்கம். 
மோடி பற்றி ஜோதிடம்



இவ்வாறு அவர் பிரதமர் மோடி, அசாம் மாநிலம் நிதி மந்திரி ஹிமானந்த பிஸ்வா சர்மா ஆகியோரை பற்றி கணித்து பேஸ்புக் இணைய தளத்தில் ஜோதிடம் கூறி யிருந்தார்.

அதில் 2021 சட்டசபை தேர்தலில் கவுகாத்தியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யும் போது பயங்கர வாதிகள் தாக்குதல் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். 
மேலும் சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்தின் போது மாநில மந்திரி ஹிமானந்த பிஸ்வா சர்மா கொலை செய்யப் படுவார் என்று கூறியிருந்தார்.

இது பற்றிய தகவல் போலீஸ் கவனத்திற்கு வந்தது. இதனை யடுத்து கிஷோர் சர்மா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings