செப்.,11 -ல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் !

0
வெளிநாடு சென்றுள்ள முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் தமிழகம் திரும்புகிறார். அதற்கு அடுத்த நாளான 11ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது. 
புதிய மோட்டார் வாகன சட்டம்
எனவே வாகன ஓட்டிகள் இனிமேல் 'ஒன்வே, சிக்னல்' என அனைத்து சாலை விதிகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்; இல்லை யெனில் பல மடங்கு அபராதம் செலுத்த வேண்டியது கட்டாயம்.

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. 

புதிய சட்டத்தின்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய்; அதிவேகமாக வாகனத்தை இயக்கினால்; உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டி சென்றால் 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும் 'சீட் பெல்ட், ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டுபவர் களுக்கான அபராதம் 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. 

'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் செலுத்துவதுடன் மூன்று மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

தமிழகத்தில் தற்போது பழைய சட்டப்படி போலீசார் குறைந்தபட்ச அபராதமே வசூலித்து வருகின்றனர். ஆனால் நீதிமன்றங்கள் புதிய மோட்டார் வாகன சட்டப்படி அதிக அபராதங்களை விதிக்க துவங்கி விட்டன.
அதனால் புதிய சட்டம் அமலுக்கு வராத நிலையில் அதில் கூறப்பட்டுள்ள அபராதம் குறித்து தமிழகத்தில் போலீசார் ஆங்காங்கே 'பேனர்'கள் வைத்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்த புதிய சட்டம் பெரும்பாலான மாநிலங்களில் செப். 1 முதல் அமலுக்கு வந்தது. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா உட்பட சில மாநிலங்கள் மட்டும் இன்னமும் புதிய சட்டத்தை அமல் படுத்தாமல் உள்ளன.
முதல்வர் பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளதால் தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. 

வெளிநாடு சுற்றுப் பயணம் முடிந்து நாளை மறுநாள் 10ம் தேதி அதிகாலை அவர் சென்னை திரும்புகிறார். மறுநாள் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பிக் கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் கூடுதல் அபராதத் தொகை விதிப்பர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)