தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து !

0
திருவாரூர் அருகே தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து. இந்த விபத்தில் 30- க்கும் மேற்பட்டோர் படுகாயங் களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து




திருவாரூரில் இருந்து வடபாதி மங்கலம் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருநாட்டியத் தான்குடி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து நிலையில் தடுமாறி சாலைக்கு அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. 

பேருந்தில் பயணம் செய்த 30- க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். இருப்பினும் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர். 
பேருந்து விபத்துக் குள்ளானதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடி யாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாரு க்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காய மடைந்தோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டனர். 




அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதே பேருந்து இப்பகுதியில் தொடர்ந்து பலமுறை ஆற்றில் கவிழ்வது வாடிக்கை யாக இருப்பதாக. இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
மேலும் இந்த சாலையை அகலப் படுத்த வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். விபத்து குறித்து வடபாதி மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings