படிப்பதற்கு வயது தடையில்லை... 84 வயது சிறுவன் மெருகே !





படிப்பதற்கு வயது தடையில்லை... 84 வயது சிறுவன் மெருகே !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பசிக்கும் ஒருவனுக்கு மீன் சாப்பிடக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுங்கள்” என்கிறது உலகின் தொன்மை யான ஒரு கதை. கற்பி ஒன்று சேர் புரட்சி செய் என்றார் அம்பேத்கர். 
ஆப்ரிக்க நாடான கென்யா
ஒருவருக்கு கல்வி மறுக்கப் படுதல் என்பது நீதி மறுக்கப் படுதலாகும். கல்வி என்பது மானுட உரிமை. மறுக்கக் கூடாத நீதி.

கென்ய விடுதலைக் காக போராடி அதில் தன் குடும்பத்தையே இழந்த மெரூகே எனும் 84 வயது முதியவர், தனது கிராம தொடக்கப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்க விரும்பினார். 
புதிய கென்ய அரசும் கல்வித் துறையும் அந்தச் சூழலை எப்படி எதிர் கொண்டது என்ற உண்மைக் கதை தான் “தி ஃபர்ஸ்ட் கிரேடர் (The First Grader - 2010). 

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யா, ப்ரிட்டீஷ் ஆதிக்கத்தி லிருந்து டிசம்பர் 12, 1963’ல் விடுதலை பெற்றது. 

கென்ய விடுதலை போரில் பெரும் பங்காற்றிய ”மவ் மவ்” என்ற கிளர்ச்சி யாளர்கள் அமைப்பில் இணைந்து போராடிய மெரூகே தான் இவ் உண்மை கதையின் நாயகன்.

2003-ஆம் அண்டு கென்ய வானொலி மூலம் அனைவருக்கும் இலவச தொடக்கக் கல்வி என்ற அறிவிப்பை கேட்டு 

பலரும் தங்கள் குழந்தைக ளுடன் கிராம கல்வி அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பிக் கிறார்கள். 

அதில் 84 வயதான மெரூகே தன்னையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். தான் எழுதப் படிக்க ஆசைப் படுவதாகவும் 

தனக்கு சுதந்திர கென்ய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருப்ப தாகவும் அதை தானே வாசிக்க ஆசைப் படுவதாகவும் சொல்கிறார்.

ஆனால் பள்ளி ஆசிரியை ஜானே மற்றும் உடன் பணி புரியும் அல்பெர்ட் இருவரும் இது குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளி இதில் நீங்கள் சேர அனுமதி இல்லை என விளக்கம் கொடுக்கிறார்கள். 
அதை ஏற்க மறுக்கும் பெரியவர் இல்லை ரேடியோவில் அனைவருக்கும் கல்வி, என்று தான் சொன்னார்கள் என வாதிடுகிறார். 

அப்படியா சரி அப்படி யென்றால் நோட்டு, புத்தகம், பென்சில், சீருடை இவற்றுடன் வாருங்கள் என கேலியாக சொல்லி அனுப்பி விடுகிறார்கள். 

ஆனால் மெரூகே தன் கால்நடை களை விற்று பள்ளியில் சேருவதற் கான ஆயத்த பொருட்களுடன் மீண்டும் பள்ளி வாசலை அடைகிறார். 

அவர் ஒரு குழந்தை போல சீருடையும் அரைக்கால் டவுசரும் அணிந்து வந்திருந்தார். 
பள்ளி வாசலை அடைகிறார்
மெரூகே’வின் ஆர்வத்தைக் கண்ட ஆசிரியை ஜானே அவரை புன்னகை யுடனும் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார். மெரூகேவும் ஆர்வமுடன் குழந்தைக ளுடன் கல்விபயில துவங்குகிறார்.

84 வயது முதியவர் துவக்கப் பள்ளியில் படிப்பதை அறிந்த ஊடகங்கள் பள்ளியை முற்றுகையிட மெரூகே பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு “the power is in the pen” என பதில் சொல்கிறார். 
ஆசிரியை ஜானே தனக்கு ஊடக வெளிச்சமும் புகழும் கிடைக்கிறது என்பதற்காவே மெரூகே விற்கு ஆதரவளிக்கிறார் என்றெண்ணி சிலருக்கு ஜானே மீது காழ்புணர்ச்சி உண்டாகிறது. 

ஆசிரியைக்கு போனில் சிலர் மிரட்டல்களும் விடுக்கின்றனர் ஆயினும் நம் நாட்டின் விடுதலைக்காக போராடி தன் குடும்பத்தையே இழந்த போராளி 

மெரூகே-வின் ஆசையை நிறை வேற்றுவது நமது கடமை என்று எதிர்ப்புகளை மீறி முன்நகர்கிறார் ஆசிரியை ஜானே.
84 வயது முதியவர் துவக்கப் பளியில் பயில முடியாது என்று கல்வித்துறை முடிவு செய்கிறது. 

ஆனால் ஆசிரியை மெரூகே இனி இவர் மாணவர் அல்ல எனது உதவியாளர் என்று அப்பள்ளியில் அவர் தொடர்ந்து ப்ரவேசம் செய்ய வாய்ப்பளிக் கிறார். 

மெரூகே மாணவராக மட்டுமல்லாமல் அவ்வப்போது குழந்தை களுக்கு தன் சுதந்திரப் போராட்ட அனுபவம் பற்றியும் “மவ் மவ்” இயக்கம் பற்றியும் சுதந்திரம் என்ற சொல்லையும் கற்பிக்கிறார். 

எளிய முறையில் பயிலும் சில அனுபவ யுத்திகளை யும் கூட குழந்தை களுக்கு தன் வாழ்வியல் அனுபவத்தின் வாயிலாக கொடுக்கிறார்.

துரதிஷ்ட வசமாக 300 மைல்களுக்கு அப்பால் இருக்கும் வேறோரு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு 

மீண்டும் இதே பள்ளிக்கு திரும்பும் ஆசிரியை ஜானேயிடம் மெரூகே குறிப்பிட்ட அக்கடிதத்தை கொண்டு வந்து நீங்களே படித்துக் கூறுங்கள் என்று சொல்கிறார். 
அதில் மெரூகே சுதந்திரத்திற் காக சிறையில் இருந்த போது அவருக்களித்த கைதி எண் குறிப்பிடப் பட்டிருந்தது. 

அவரது இழப்புகளுக்கு புதிய கென்ய அரசு நஷ்ட ஈடுகளை வழங்குவ தாகவும். அவரது தியாகத்தை போற்றி நாடு தனது நன்றிகளையும் பாராட்டு களையும் சொல்வதாக வும் எழுதியிருந்தது. 

அது புதிய கென்ய அரசின் ஜனாதிபதி யிடமிருந்து வந்த கடிதம். கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசும் 

இத்திரைப் படத்தின் நிஜ நாயகன் மெரூகே - 84 வயதில் துவக்கப்பள்ளி சென்றவர் - என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். 
84 வயதில் துவக்கப்பள்ளி சென்றவர்
1920-ல் கென்யாவில் ஆதி குடியாக பிறந்த மெரூகே தனது 89-ஆம் வயதில் (August 14, 2009) வயிற்றுப் புற்று நோயால் நைரோபியில் உள்ள தேசிய மருத்துவ மனையில் காலமானார்.
Ann Peacock திரைக்கதை எழுதி Justin Chadwick இயக்கிய இத்திரைப் படத்தை BBC மற்றும் UK Film Council இணைந்து தயாரித்தனர். 

National Geographic Entertainment நிறுவனத்தால் 2010-ல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் $714,722 வசூல் வேட்டை யாடியது. 

படத்தில் மெரூகே கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் ஓலிவர் லிடொண்டோ. 

இவர் பிபிசி மற்றும் தற்போதைய கென்ய ப்ராட்கேஸ்டிங் கார்ப்பரேச னாக இருக்கும் வாய்ஸ் ஆஃப் கென்யாவில் மூத்த பத்திரிக்கை யாளராக இருந்தவர்.

”உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்”
என்பதை உணர்ந்திருந்த மெரூகே ஒரு கென்ய காமராஜர். வாழ்க்கை பிழை எனில் கல்வியே திருத்தம். ஒருவனது வாழ்வில் மறுக்கப்பட்ட யாவையும் கல்வி கொண்டு வந்து கொடுக்கும். 
இருண்ட வாழ்வில் கல்வியே வெளிச்சம் அந்த ஜோதியை நமது கைகள் ஏந்தக் கொடுத்து அழகுபார்க்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)