இறந்தவர்களின் உடலை எதற்காக எரிக்கிறோம்?

0
நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல் நோக்கிக் கொண்டு செல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது.
இறந்தவர்களின் உடல்
உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்தி லேயே அமைக்கப் பட்டது. உங்களைப் பொறுத்த வரையில் அவர் இறந்து விட்டார். 

ஆனால் அந்த உயிரைப் பொறுத்த வரையில் உடலை விட்டு நழுவி விட்டதாகத் தான் நினைத்துக் கொண்டு இருக்கும். 

இறந்தவர் இந்த உடல் தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்த வரையில் அவர் இறந்து விட்டார். 
ஆனால் அந்த உயிரைப் பொறுத்த வரையில் உடலை விட்டு நழுவி விட்டதாகத் தான் நினைத்துக் கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்து விடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். 

எனவே, வாய்ப்பை எதிர் நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக் கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது.
அந்த மனிதர் ஞானம் அடைந்திருந் தால், அந்த உடலை விட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறி விடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றி வரும். 
இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகிய வருக்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்துப் பல நினைவுக ளால் வருத்தம் அதிகமாகியே போகும். 

உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். 

எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாக வும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப் பட்டது. 

எனவே தான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப் பட்டது.  
அவசரத்திலும், பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக் கூடியவரை யும் தவறுதலாக எரிக்கப்பட்டு விடலாம் என்பதால், அதை 4 மணி நேரம் எனப் பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.
இந்து மதம் அல்ல
தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகி விட்டது என்னும் உண்மையை அறியும் போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக் கொண்டு இருக்காது.

இங்கு உயிருடன் இருப்பவர் களும் மாண்டவன் இனி மீளப்போவ தில்லை என்று ஒரு வித அமைதி கொள்வார்கள். 

எனவே தான் ஒருவர் இறந்து விட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாச்சாரத் தில் இருந்து வருகிறது.
போதிய விறகு இல்லாத பாலைவனங் களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர் பிரதேசங்க ளிலும் எரிப்பதை விடப் புதைப்பது சுலபமாக இருந்தது. 
எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறை யாக மாறி விட்டது! நமது தர்மம் பல உண்மையான அர்த்தங் களை உள்ளடக்கியது. 

இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”
ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவரு க்கும் தெரியப் படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings