அமெரிக்க ஷாப்பிங் மால் துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலி !

0
அமெரிக்கா வின் டெல்சாஸ் மாகாணத்தின் எல் பசோ பகுதியில் அமைந்துள்ளது வால்மார்ட் ஷாப்பிங் மால். வார இறுதி விடுமுறை என்பதால் ஷாப்பிங் மாலில் கூட்டம் அதிகமாக இருந்தது. 
துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலி



வாடிக்கை யாளர்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டிருந் தனர். அப்போது அந்த ஷாப்பிங் மாலின் உள்ளே திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்த வர்களை நோக்கி துப்பாக்கி யால் சுடத் தொடங்கி னான். 
இந்த திடீர் தாக்குதலால் பொது மக்கள் அலறி யடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர் என அம்மாநில கவர்னர் கிரெக் அபார்ட் தெரிவித்துள்ளார். 

மேலும் 25க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings