கொள்ளையனை பிடிக்க முயன்ற தாய், மகள் பலி !

0
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மீனா சுவென் (47). இவரது மகன் ஆகாஷ் (24), மகள் மனிஷா (21) ஆகியோருடன் டெல்லியில் இருந்து நிஜாமுதீன் - திருவனந்தபுரம் விரைவு ரெயிலில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பறப்பட்டு சென்றார்.
கொள்ளையனை பிடிக்க முயன்ற தாய், மகள் பலி



சனிக்கிழமை அதிகாலை மதுரா அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மீனா வைத்திருந்த பையை கொள்ளை யர்கள் எடுத்துச் செல்ல முயன்றனர்.

உடனடியாக விழித்துக் கொண்ட மீனா கூச்சலிட்டபடி கொள்ளையர் களிடம் இருந்து பையை பறிக்க முயன்றார். சத்தம் கேட்டு எழுந்து வந்த மனிஷாவும் கொள்ளையர் களிடம் இருந்து பையை பறிக்க முயன்றதோடு தாயுடன் சேர்ந்து கொள்ளையர் களை மடக்கி பிடிக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக மீனா, மனிஷா ஆகியோர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டனர். அப்போது எதிரே வந்த சம்பர்ச்- கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு மீனா, மனிஷா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர்.



இதற்கிடையே மீனாவின் மகன் ஆகாஷ் அவசர சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தி ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அவர்கள் மீனா, மனிஷா ஆகியோர் கீழே விழுந்த இடத்துக்கு சென்ற போது அங்கு இருவரும் பிணமாக கிடந்தனர்.
இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொள்ளையர்கள் பையுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

பையில் ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 மொபைல் போன்கள், ஏ.டி.எம். கார்டுகள், அடையாள அட்டைகள், அழகு சாதனப் பொருட்கள் இருந்தன. கொள்ளையர் களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings