கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளார் விட்டவருக்கு 2 நாள் சிறை காவல் !

0
டெல்லி முதல்- மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் நேற்று மாலை திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டினார்.
கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளார் விட்டவருக்கு 2 நாள் சிறை காவல்




அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத வார்த்தைக ளால் திட்டியவாறு ஓடி வந்து வாகனத்தின் மீது ஏறி நின்று, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். 
இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலை குலைந்தார். அவரை தாக்கிய சுரேஷ் என்பவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்




அவர் மீது டெல்லி காவல்துறையின் கிரிமினல் சட்டப்பிரிவு 107/5-ன்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். 
கைதான சுரேஷை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தர விட்டார். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings