சந்திரயான்-2 எடுத்த விதவிதமான படங்களை வெளியிட்டது இஸ்ரோ !

0
சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 22-ந் தேதி வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப் பட்டது.
சந்திரயான்-2 எடுத்த படங்களை வெளியிட்ட இஸ்ரோ



பூமியின் சுற்றுவட்டப் பாதையை கடந்து நான்காம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 வரும் 20-ம் தேதி சந்திரனில் தடம் பதிக்கவுள்ளது. 
இந்த காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நேரடியாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் பூமியை பலவிதமான கோணங்களில் எடுத்த புதிய புகைப் படங்களை இஸ்ரோ முதன் முறையாக இன்று வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தில் பொருத்தப் பட்டுள்ள L14 கேமராவால் எடுக்கப்பட்ட இந்த புகைப் படங்களின் மூலம் பூமியை இதுவரை நாம் காணாத புதிய பரிமாணத்தில் பார்க்க முடிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings