பிளாட்பாரத்தில் உறங்கிய குழந்தையை கடத்தி கொடூர கொலை !

0
ஜார்காண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் ரெயில்வே பிளாட்பாரத்தில் கடந்த வாரம் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. இரவு முழுவதும் தேடியும் குழந்தை கிடைக்க வில்லை. 
பிளாட்பாரத்தில் உறங்கிய குழந்தையை கடத்தி கொடூர கொலை



மறுநாள் காலை குழந்தையின் தாய் போலீசாரிடம் தெரிவித் துள்ளார். இதில், அந்த பெண் தனது நண்பர் ஒருவரை சந்தேகிப்ப தாகவும் தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் குழந்தை காணாமல் போன அன்று இருந்த சிசிடிவி காட்சிளை கண்டனர்.

இதில், ஒரு நபர் தனது கைகளில் தூங்கும் குழந்தை யுடன் நடந்து செல்வது கண்டறியப் பட்டது. இந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, போலீசார் குற்றவாளிகளை கண்டறிந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவர் மற்றும் அப்பெண் சந்தேகித்த நபர் உட்பட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். 

ரெயில் நிலையத்தி லிருத்ந்து நான்கு கி.மீ தூரத்தில் சேரிகளுக்கு அருகே புதருக்கு பின்னால் இருந்த பிளாஸ்டிக் பையில் குழந்தையின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப் பட்டது.




குற்றவாளிகள் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் கழுத்தை நெரித்து பின் தலையை துண்டித்ததாக ஒப்புக் கொண்டனர். குழந்தையின் தலையை கண்டு பிடிக்கும் பணியில் மோப்ப நாய்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. 
ஆனால், தலை இன்னும் கிடைக்க வில்லை' என கூறினர். இச்சம்பவம் அப்பகுதியி னரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings