பி.எம்.டபிள்யூ காரை ஆற்றில் தள்ளிய வாலிபர் - காரணம் !

0
அரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தையிடம் புதிதாக ஜாகுவார் கார் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். 
பி.எம்.டபிள்யூ காரை ஆற்றில் தள்ளிய வாலிபர்




இதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்ததால், ஆத்திர மடைந்த இளைஞர் ஏற்கனவே பெற்றோர் வாங்கிக் கொடுத்திருந்த பி.எம்.டபிள்யூ சொகுசுக் காரை ஆற்றில் தள்ளி யுள்ளார்.

அதனை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களிலும் பதிவேற்றி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார். நீரில் மிதந்து சென்ற கார் ஆற்றின் நடுவில் இருந்த புற்களில் சிக்கி நின்றது.
இதையடுத்து உள்ளூர் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் காரை வெளியே கொண்டு வர அந்த இளைஞர் முயன்ற தாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

35 லட்சத்துக்கும் மேற்பட்ட விலையுடைய காரை ஆற்றில் தள்ளிய இளைஞரின் தந்தை, மிகப்பெரிய நிலக்கிழார் எனக் கூறப்படு கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)