ராஜகோபால் உடல் ஸ்டான்லியில் பிரேத பரிசோதனை... நாளை இறுதிச் சடங்கு !

0
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று சென்னையில் காலமானார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 72. 
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால். இதனால் கடந்த வாரம் ஹைகோர்ட்டில் சரணடைந்தார். 

ஏற்கனவே உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜகோபால், சரணடைய வரும் போதே ஆம்புலன்சில் தான் வந்தார். பிறகு கோர்ட் வளாகத்திலேயே உடம்பு இன்னும் முடியாமல் போனது.

சுவாசம்

இதன் காரணமாக சிறைக்கே போகாமல், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்தால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.
ஆஸ்பத்திரி

ஆனாலும் தொடர்ந்து உடல்நிலை மோசமாகி கொண்டே வந்தது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதி தவிர உயர்ந்த சிகிச்சை வசதிகள் இல்லை என்பதாலும், 

அதனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி தர வேண்டும் என்று அவரது மகன் சரவணன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உறுதி தந்தனர்

ஆனால் அவரை இடமாற்றுவது சிக்கலானது என்று ஆஸ்பத்திரி அறிக்கை விடுத்த நிலையில், அதற்கு தான் முழு பொறுப்பேற்ப தாக ராஜகோபால் மகன் தரப்பு உறுதி தந்தது. 

இதனை ஏற்ற கோர்ட்டும், ராஜகோபாலை தனியார் மருத்துவ மனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. 

அதனால் அண்ணாச்சியை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவ மனையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதித்தனர்.

உயிர் பிரிந்தது

ஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரி யிலேயே இன்று காலை ராஜகோபால் உயிர் பிரிந்தது. 

இதையடுத்து, அவர் தண்டனை கைதி என்பதால் அவரது உடலானது சென்னை அரசு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக் காக கொண்டு செல்லப்பட்டது. 

மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

பிரேத பரிசோதனை

இதன் பிறகு தான் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு,

பின்னர் அவரது உடல் நெல்லை மாவட்டம், புன்னை நகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 
நாளை அங்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளும் அங்கு நடந்து வருகின்றன.

அண்ணாச்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings